அரக்கோணம் அருகே பரிதாபம் அம்மாவை அடித்த தந்தை கொலை மகன் கைது

Read Time:1 Minute, 58 Second

Evening-Tamil-News-Paper_42299616337மது குடித்துவிட்டு அம்மாவை அடித்து தகராறு செய்த தந்தையை அவரது மகனே கொலை செய்துள்ளார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (56). நெசவுக்கூடம் நடத்தி வந்தார். இவரது மனைவி திலகவதி (46). இவர்களுக்கு கவுரிசங்கர்(25), சுரேந்தர் (21) என்ற 2 மகன்கள், சரண்யா (19) என்ற மகள் உள்ளனர்.

அண்ணாமலை அடிக்கடி குடித்து விட்டு வேலை செய்யாமல் இருந்துள்ளார். போதையில் மனைவி மற்றும் மகன்களிடம் தகராறு செய்துள்ளார். வழக்கம் போல் போதையில் வீட்டுக்கு வந்த அண்ணாமலையை மனைவி, மகன்கள் தட்டி கேட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மனைவியை அண்ணாமலை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். அதை பார்த்த மகன் சுரேந்தர், ஓடி வந்து தடுத்துள்ளார். மகனையும் அடிக்க பாய்ந்தார் அண்ணாமலை.

இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர், அங்கிருந்த கட்டையை எடுத்து தந்தையை சரமாரி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார். அதை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

தகவல் அறிந்து நெமிலி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சுரேந்தரை இன்று காலை கைது செய்தனர். போதையில் தகராறு செய்த தந்தையை ஆத்திரத்தில் மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயசுப் பெண்களின் வலி என்ன ? திரு-புகழ் சொல்கிறது
Next post உலகத்தில இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள்… (VIDEO)