சென்னை பங்களாவில் விபசாரம்: ரகசிய அறையில் இளம்பெண் மீட்பு – 3 பேர் கைது!!

Read Time:1 Minute, 41 Second

b9e113a7-d1a2-47cf-a166-bb4e9c1d6e47_S_secvpfசென்னையில் பங்களாவை வாடகைக்கு எடுத்து விபசார தொழில் செய்த புரோக்கர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அந்த வீட்டின் ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விபசார இளம்பெண் போலீசாரால் மீட்கப்பட்டார்.

சென்னை நெசப்பாக்கத்தில், பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் பெண்களை வைத்து ஒரு கும்பல் விபசார தொழில் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த விபசார கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவகுமார், உதவி கமிஷனர் கிங்ஸ்லின் ஆகியோர் மேற்பார்வையில் விபசாரதடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதி தலைமையிலான தனிப்படை போலீசார் குறிப்பிட்ட அந்த விபசார பங்களா வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

அப்போது ஒரு ரகசிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். அந்த பெண்ணை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர்கள் உதயகுமார், கனகராஜ், ஜோதிமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருடுறதுலையும் எம்புட்டு கஷ்டம்.. (VIDEO)
Next post கர்ப்பிணிகளே! இந்த மாதிரி ஸ்டைல் பண்ணாதீங்க!!