மீண்டும் நடிப்பு கோதாவில் பத்மப்பிரியா!!(PHOTOS)
தவமாய் தவமிருந்து, மிருகம், பொக்கிஷம் உள்பட பல படங்களில் நடித்தவர் பத்மப்பிரியா. மிருகம் படத்தில் நடித்தபோது அவரது கன்னத்தில் டைரக்டர் சாமி அறைந்ததால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதோடு, சாமி படம் இயக்கவும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
இதனால் அதன்பிறகு உற்சாகமாக நடித்து வந்த பத்மப்பிரியாவுக்கு தமிழில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்ததால், தாய் மொழியான மலையாளத்தில் கவனத்தை திருப்பினார்.
ஆனால், அங்கு அவரை யாரும் கதாநாயகி பட்டியலில் சேர்க்கவில்லை. மாறாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகத்தான் பயன்படுத்தினார்கள். அதனால் கடந்த ஆண்டு சுத்தமாக படமே இல்லாமல் கோடம்பாக்க கதவுகளையும் தட்டிப்பார்த்தார் பத்மா.
ஆனால் அவரை ஏறெடுத்து பார்க்கக்கூட ஆளில்லை. அதனால் வெளிநாட்டுக்கு சென்று, விட்ட படிப்பை தொடரப்போவதாக செய்தி வெளியிட்டார் பத்மப்பிரியா.
இந்த நிலையில், தற்போது கெளதம்மேனன் தயாரிப்பில் கற்றது தமிழ் ராம் இயக்கியுள்ள தங்க மீன்கள் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் பத்மப்பிரியா. இதையடுத்து மீண்டும் தனது அபிமான டைரக்டர்களை அணுகி சான்ஸ் கேட்டு வருகிறார்.
Average Rating