10 ரூபாய்காக தாயை தீயிட்டு கொழுத்திய மகன்!!
இந்தியாவின், ஆந்திர மாநிலத்தில் 10 ரூபாய் தர மறுத்த தாயை அவரது மகனே தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபாய் (50), இவருக்கு அம்பேத்கர் (25) என்ற மகன் உள்ளான்.
எப்போதும் தாயிடம் செலவுக்கு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த அம்பேத்கர், நேற்று செலவுக்காக அவரது தாயிடம் 10 ரூபாய் கேட்டுள்ளார்.
மகன் கேட்ட 10 ரூபாயை கொடுக்க துர்காபாய் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அம்பேத்கர், துர்காபாயின் மீது கேரோசினை ஊற்றி தீயிட்டு எரித்தார்.
துர்காபாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அம்பேத்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating