பட்டதாரி பெண் புகாரில் கணவன், மாமியார் கைது!!
வரதட்சணை கேட்டு கணவன் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்துவதாக பட்டதாரி பெண் அளித்த புகாரில் கணவன் மற்றும் மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் விட்டல் பிரசாத் ராவ்.
இவரது மகள் ஆர்த்திதேவி காம்தானா. எம்.பி.ஏ பட்டதாரி. கடந்த 2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வம்சி கிருஷ்ணா தோட்டலா என்பவருக்கும் ஆர்த்தி தேவிக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்பு வரதட்சணையாக ரூ.10 லட்சமும், சென்னையில் ஒரு பிளாட்டும் வாங்கி தர வேண்டும் என்று கணவன் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கணவனுடன் ஆஸ்திரேலியா சென்றார் ஆர்த்தி.
அப்போது ஆர்த்தியின் சம்பள பணத்தை முழுமையாக வாங்கிக் கொண்டு அதை ஊதாரித்தனமாக செலவு செய்துள்ளார் பிரசாத் ராவ். இதனால் தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆர்த்தி நாடு திரும்பினார்.
தனது பெற்றோரிடம் கணவன் கொடுமைப்படுத்துவது குறித்து சொல்லி அழுது புலம்பியுள்ளார். பெற்றோர் சமாதானப்படுத்தி ஆர்த்தியை பெங்களூரில் உள்ள கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவனின் பெற்றோர் ஆர்த்தியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆர்த்தி சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கணவன் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் செய்தார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வரதட்சணை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெங்களூருக்கு சென்ற தனிப்படை போலீசார் கணவனையும், அவரது பெற்றோர் தாமோதரன், லட்சுமி பிரபா ஆகியோரையும் கைது செய்தனர்.
Average Rating