விஷம் குடித்து மாணவன் சாவு!!
Read Time:1 Minute, 12 Second
ஆவடி அருகே மிட்னமல்லி காந்தி 2வது ரோட் டை சேர்ந்தவர் பிள்ளை. ஓய்வு பெற்ற ராணுவத்துறை ஊழியர். இவரது மகன் நமீத் கிருஷ்ணன் (18). சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் சவுண்ட் இன்ஜினியரிங் படித்துவந்தார். மேல் படிப்புக்காக வெளிநாடு செல்வதற்காக பெற்றோரிடம் கேட்டார். அவர்கள் சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நமீத் கிருஷ்ணன், பூச்சி மருந்து குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை நமீத் கிருஷ்ணன் இறந்தார்.முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நமீத் கிருஷ்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரிக்கின்றனர்.
Average Rating