இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆசிரம நிர்வாகி மீது போலீசில் புகார் பாடியநல்லூரில் பரபரப்பு!!
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரம நிர்வாகி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் பார்த்திபன். இவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
பாடியநல்லூர் மொண்டியம்மன்நகர் சுப்பிரமணிய பாரதியார் தெருவில் ஒரு ஆசிரமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி படிக்கின்றனர். இங்கு படிக்கும் 16 வயது இளம்பெண்ணை ஆசிரம நிர்வாகி பாண்டியன் (எ) அனுசுயா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தும் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளார்.
உயிர்மொழி திரைப்படத்தின் காதல்
இதுகுறித்து நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Average Rating