வா.. வந்து டான்ஸ் ஆடு பக்கத்து வீட்டு பெண்ணிடம் இம்சை போதை தொழிலாளி கைது!!

Read Time:1 Minute, 29 Second

tumblr_mg47daVJFp1rk20wio1_500கோவை துடியலூர் அருகே என்ஜிஜிஓ காலனி கணேஷ் நகரை சேர்ந்தவர் கலைவேந்தன் (30). கட்டிட தொழிலாளி. அதே பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அய்யம்மாள்(40). இவரும் கட்டிட வேலை செய்கிறார்.தான் வேலைக்கு போகும் இடத்துக்கு அய்யம்மாளையும் அழைத்து செல்வார். வீட்டில் இருக்கும் நேரத்திலும் அய்யம்மாளிடம் வலிய சென்று பேசுவார்.

நேற்று மது குடித்து விட்டு முழு போதையில் வீடு திரும்பினார் கலைவேந்தன். நேராக அய்யம்மாள் வீட்டுக்கு சென்ற அவர், ‘அய்யம்மா. வா வந்து டான்ஸ் ஆடு’ என்றார். பிரச்னை செய்யாமல் வெளியே போய்விடு என்று அய்யம்மாள் சொன்னதையும் காதில் வாங்காமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரது தொந்தரவு தாங்க முடியாமல் துடியலூர் போலீசில் அய்யம்மாள் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கலைவேந்தனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அசாத் சாலி கைது மூலம் மேற்குலகை வலைத்துப்போட அரசாங்கம் முயற்சி!!
Next post இங்கிலாந்தின் ரொம்ப வயதான விலை மாது!!(PHOTOS)