கேஸ் கசிந்து வீட்டில் தீ பெண் பரிதாப பலி கணவன், மகன் சீரியஸ்!!

Read Time:1 Minute, 45 Second

images (1)மாதவரத்தில் வீட்டின் சமையல் அறையில் கேஸ் கசிவால் நேற்று ஏற்பட்ட தீயில் தம்பதி, மகன் ஆகியோர் உடல் கருகினர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் இறந்தார். அப்பா, மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை அடுத்த மாதவரம் பரசுராமன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (55). தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (46). இவர்களது மகன் நாகராஜன் (25), கார்பென்டர். நேற்று காலை வீட்டில் டீ போட சரஸ்வதி கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்தபோது கேஸ் டியூப்பில் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்தது.

இதில் சேலையில் தீப்பிடித்ததில் சரஸ்வதி உடல் கருகினார். பக்கத்து அறைக்கு தீ பரவியதால் சரஸ்வதியின் அலறல் கேட்டு அவரை காப்பாற்ற ஓடிவந்த ராதா கிருஷ்ணன், நாகராஜ் ஆடையிலும் தீப்பற்றியது.

அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். இதில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சரஸ்வதி இறந்தார்.

அப்பா, மகன் ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்லியாக நடிக்கிறார் துளசி!!
Next post விரைவில் திரைக்கு வரவிருக்கும் ’சோக்காலி’ – கதை + ஸ்பெஷல் ஆல்பம்!!(PHOTOS)