திருவண்ணாமலை அருகே 9 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை!!
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அடுத்த முத்தரசம் பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 22). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சினி (வயது 20). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கீர்த்தனா என்ற 9 மாத பெண்குழந்தை உள்ளது.
நேற்று சிவரஞ்சினி தனது குழந்தை கீர்த்தனாவுடன் போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் குழந்தையை அழைத்து கொண்டு வீடு திரும்பினார். ஆனால் அவர் மட்டும் வீடு வந்து சேர்ந்தார். வீட்டில் உள்ளவர்கள் குழந்தையை எங்கே என்று கேட்டனர்.
அப்போது நான் வரும் வழியில் 2 பேர் வந்தனர். என்னிடம் பேசி கொண்டு வந்தனர். அதற்கு பிறகு சிறிது நேரத்தில் நான் மயக்கமடைந்து விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். இதை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் குழந்தையை தேடி சென்றனர்.
இந்நிலையில் சிறுவல்லூர் காட்டு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குழந்தையின் பிணம் மிதந்தது. இது குறித்து கடலாடி பொலிஸில் புகார் செய்யபட்டது. பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிவரஞ்சினி கூறிய 2 பேர் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார்களா? அல்லது சிவரஞ்சனியே குழந்தையை கொன்று கிணற்றில் வீசி விட்டு நாடகமாடுகிறாரா? என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating