பங்களதேஷ் தீ விபத்தில் 8 பேர் பலி!!
பங்களதேஷிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆடைந்தொழிற்சாலை கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது. இதில் 900 மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பங்களதேஷில் ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து பரந்தளவில் ஆய்வுகள் இடம்பெற்றுவரும் நிலையிலேயே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. பல மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த இந்த ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடினார்கள்.
குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னரே வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் உயிரிழப்புக்கள் கணிசமாகக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை விபத்து நடந்தபோது தொழிற்சாலைக் கட்டிடத்தின் உரிமையாளரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அங்கு இருந்துள்ளர்.
இவர்கள் இருவரும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரு வாரங்களுக்கு முதல் ஏற்பட்ட கட்டிட விபத்தினையடுத்து சர்வதேச கொள்வனவாளர்களை திருப்திப்படுத்தவும், தொழில்துறை தரங்களை மேம்படுத்தவுமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்களதேஷ் அரசு 18 ஆடைத்தொழிற்சாலைகளை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating