கிறிஸ்தவ மடத்திற்கு அருகில் நிர்வாணமாக அலைந்து திரிந்தவருக்கு எச்சரிக்கை!!
Read Time:1 Minute, 13 Second
பிரான்ஸின் தென்பகுதியில் நிர்வாணமாக அலைந்து திரிந்து அவ்விடத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மடத்தில் இருந்த அருட் சகோதரிகளுக்கு சங்கடத்தைத் ஏற்படுத்திய ஒருவரை பொலிஸார் கண்டித்துள்ளனர்.
ப்ரொவான் பிராந்தியத்து மலைக்குன்றுகளில் அமைந்துள்ள அருட் சகோதரிகளின் மடத்துக்கு அருகே ஒரு ஆண் நிர்வாணமாக அலைகிறார் என்று பலமுறை பொலிஸாருக்கு ஒரு அருட் சகோதரி முறப்பாடு செய்துள்ளார்.
காற்றாட நடப்பதற்காகதான் அவ்விடத்துக்குச் சென்றதாக் கூறும் இந்த 46 வயது ஆண் தனது நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மலைச்சாரலில் இருந்து இயற்கையை இரசிப்பது நான் மட்டும் அல்ல. அங்கு மற்றவர்களும் இருந்தார்கள் என்பதை அந்நேரம்தானம் உணர்ந்திருக்கவில்லை என பொலிஸாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating