குளிர்சாதன பெட்டிக்குள் அடைத்து நாய்களைக் கொன்ற முதியவர்!!

Read Time:1 Minute, 25 Second

fridgeடென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதி உள்ளது. இங்கு 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்தார். அதற்கு அண்டை வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் நாய்கள் வளர்க்க கோர்ட்டு அவருக்கு தடை விதித்தது.

ஆனால், அதையும் மீறி அவர் நாய்களை வளர்த்து வந்தார். எனவே, அவற்றை பறிமுதல் செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். இதை அறிந்த அவர் தான் வளர்த்த நாய்களை வீட்டில் இருந்த பெரிய குளிர்சாதன பெட்டியில் (பிரீசர்) அடைத்து வைத்தார். சோதனையின் போது பிரீசரை போலீசார் திறந்து பார்த்தனர். உள்ளே 30 நாய்கள் இறந்த நிலையில் கிடந்தன.

அவற்றில் 25 குட்டி நாய்களும் அடங்கும். ஏன் இதுபோன்று செய்தீர்கள் என்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு நாய்கள் சத்தமாக குரைத்தன. அதனால் சோதனையின் போது நாய்கள் இருப்பது தெரிந்துவிடும் என்பதால் உள்ளே போட்டு அடைத்து வைத்தேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பங்களதேஷ் தீ விபத்தில் 8 பேர் பலி!!
Next post மகளை பிறருக்கு பங்குபோட்ட தந்தைக்கு பத்தாண்டு சிறை!!