பஸ் நடத்துனரின் தாக்குதலில் முதியவர் காயம்!!

Read Time:2 Minute, 44 Second

0511-0905-2402-3558_Public_Bus_clipart_imageஇலங்கை போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை சாலையின் பஸ் நடத்துனரால் தாக்கப்பட்ட வயோதிபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸ்பிரிவு தெரிவித்துள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொம்மாதுறை வாசியான 61 வயதுடைய சிவகுரு வேதநாயகம் என்பவரே மேற்படி பஸ் நடத்துனரின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த ஞாயிறு பிற்பகல் பிள்ளையாரடி எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொலிஸ் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வயோதிபர் கொம்மாதுறையில் இருந்து பஸ்ஸில் பிள்ளையாரடிக்கு பற்றுச்சீட்டு பெற்றுள்ளார். பற்றுச்சீட்டு கட்டணம் 27 ரூபாய் முதியவர் 1000 ரூபாவை பஸ் நடத்துனரிடம் கொடுத்த போது மீதியை இறங்கும் இடம் வரும் போது தருவதாக நடத்துனர் முதியவரிடம் தெரிவித்துள்ளார்.

முதியவர் தாம் இறங்கும் இடமான பிள்ளையாரடி வந்ததும் மீதியை கேட்க நடத்துனர் 72 ரூபாவை வழங்கியுள்ளார். தான் நூறு ரூபாய் தரவில்லை எனவும் 1000 ரூபாய்க்கான மீதியை தருமாறும் கேட்டு வாதாடியுள்ளார். அதனை மறுத்த நடத்துனர் முதியவரை கையில் இருந்த பற்றுச்சீட்டு புத்தகத்தினால் தாக்கிவிட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதில் முகம், உதடு, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவசர சிகிச்சையின் பின்னர் அவர் தேறி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்பு பொலிஸார் வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அண்ணனால் கற்பழிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தும் ஏற்காத போலீஸ்! மனமுடைந்த பெண் தற்கொலை!!
Next post நீச்சல் உடையில் தோன்றும் கிம்பர்லி கார்னரின் படங்களின் தொகுப்பு !!(PHOTOS)