காஷ்மீரில் படமாக்கப்படும் விக்ரமனின் ‘நினைத்தது யாரோ’!!
தமிழ்நாட்டிலிருந்து படப்பிடிப்புக்கு வந்திருக்கிறோம் என்றவுடன் காஷ்மீர் பொலிஸ் தங்களது படையுடன் வந்து பாதுகாப்பு கொடுத்து எந்த தொந்தரவும் இல்லாமல் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
எனக்கு தெரிந்து ரஜினி நடித்த ‘வேலைக்காரன் ’ படத்திற்குப் பின்பு ‘நினைத்தது யாரோ’ படப்பிடிப்பை நாங்கள் தான் காஷ்மீரில் நடத்தி இருக்கிறோம்.
காஷ்மீரில் படப்பிடிப்பு என்றவுடன் வேண்டாமே பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுமே என்று நிறைய நண்பர்கள் பயமுறுத்தினர். ஆனால், எந்த பிரச்சனையுமே ஏற்படவில்லை என்பது தான் யதார்த்தம்.
‘நினைத்தது யாரோ’ பாடல்கள் மட்டுமல்ல, படமும் பிரமாதமாக வந்திருக்கிறது என்கிறார் பெருமையுடன் விக்ரமன்.
பத்தடிக்கு ஒரு ராணுவ வீரர் என்ற கணக்கில் காஷ்மீர் முழுக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அரண் அமைத்து நம்மை பாதுகாக்கிறார்கள் என்ற கூடுதல் தகவலையும் கூறியுள்ளார் விக்ரமன்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
ஒளிப்பதிவு – R.K. பிரதாப்
இசை – X. பால்ராஜ்
எடிட்டிங் – S. ரிச்சர்ட்
கலை – ஜனா
பாடல்கள் – கலைக்குமார், பா. விஜய், வைரபாரதி
நடனம் – சுசித்ரா, ராபர்ட், பாஸ்கர்
ஸ்டன்ட் – தளபதி தினேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம்
தயாரிப்பு – P. ரமேஷ், இமானுவேல்
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் – விக்ரமன்
Average Rating