சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: ஒரு சிறுமி கழுத்தை நெறித்து கொலை!!

Read Time:1 Minute, 50 Second

news_7530உத்தர பிரதேசத்தில் 3 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் கோராவல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது சிலர் சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்து, கழுத்தை நெறித்துக் கொன்றனர். இதற்கிடையே சிறுமியின் குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை திருமணம் நடந்த இடத்திற்கு அருகே சிறுமியின் உடல் கிடந்தது. பிரதே பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் பிஜ்னர் மாவட்டம் ஷிவாலா கலன் பகுதியில் 12 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து ரிதேஷ், ரீனு, அர்ஜுன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் ரிதேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று பினாவர் பகுதியில் 6 வயது சிறுமியை 21 வயது வாலிபர் கற்பழித்துள்ளார். இதையடுத்து சிறுமியை கற்பழித்த அன்னு என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரிழந்த கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர்மீண்ட அதிசயம்!!
Next post எல்லை மீறி கவர்ச்சியாக நடிப்பதா? இணைய தளத்தில் ரசிகர்கள் தாக்கு: பாமா ஷாக்!!