கேரவன் கேட்காத நடிகை: சுந்தர்.சி பூரிப்பு!!

Read Time:2 Minute, 5 Second

images (2)‘கலகலப்பு‘ படத்தையடுத்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு‘ படத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. படம் பற்றி அவர் கூறியதாவது: எனது படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும். அதை இந்த படத்திலும் எதிர்பார்க்கலாம். தீயா வேலை செய்யணும் குமாரு என்ற டைட்டில் வைத்தபோதே நல்ல வரவேற்பு இருந்தது.

சித்தார்த் ஹீரோ. ஹன்சிகா ஹீரோயின். ஷூட்டிங் முழுவதுமே ஒரு குடும்பம்போல் பணியாற்றினோம். சித்தார்த் எனது இளைய சகோதரர்போல் ஆகிவிட்டார். ஹன்சிகாவை ஜுனியர் குஷ்பு என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். அவர் குஷ்பு சாயலில் இருப்பது மட்டுமல்லாமல் அவரைப்போல் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்துகிறார்.

அவரது நேரம் தவறாமை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜப்பானில் ஷூட்டிங் நடந்தபோது அவரது பொறுப்புணர்வு என்னை வியக்க வைத்தது.

அவுட்டோர் ஷூட்டிங் எங்கு நடந்தபோதிலும் கேரவன் கேட்டது கிடையாது. நிறைய ஹீரோயின்கள் என் படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களில் முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தவர் ஹன்சிகாதான்.

சந்தானம், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடன காட்சியில் குஷ்புவும் கவுரவ தோற்றத்தில் ஆட வேண்டும் என்று சக நட்சத்திரங்கள் கேட்டதையடுத்து அவரும் சில நடன அசைவுகளுக்கு ஆடினார்.

இசை சத்யா. ஒளிப்பதிவு கோபி அமர்நாத். தயாரிப்பு குஷ்பு. வெளியீடு யுடிவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாமல் ஊராட்சி தலைவர் தே.பா. சட்டத்தில் கைது!!
Next post பெற்ற குழந்தையை பணத்திற்கு விற்று நாடகமாடிய தாய்!!