4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது!!
பீகார் மாநிலத்தில் 4 மாத கர்ப்பிணியை 11 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பூர்ணியா மாவட்டத்தில் பேலி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்ரதா. இவரது கணவர் லாரி கிளீனராக உள்ளார்.
தற்போது சுஷ்ரதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். சுஸ்ரதா தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கஷ்டமான சூழ்நிலையில் கர்ப்பமாக உள்ள சுஷ்ரதாவிற்கு பண உதவி செய்வதாக வந்தார் அவருக்குத் தெரிந்த பெண் ஒருவர்.
நேற்று முன்தினம் சுஸ்ரதாவின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். அப்போது உனக்கு பண உதவி வாங்கி தருகிறேன் என்று கூறி அவர் சுஸ்ரதாவை அழைத்து சென்றார்.
சந்த்பூர் என்ற கிராமத்துக்கு சென்றதும் அந்த பெண் சுஸ்ரதாவை ரூ.11 ஆயிரத்துக்கு அசோக்சிங் என்பவருக்கு விற்றார்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த அசோக்சிங், ரூ. 11 ஆயிரம் கொடுத்துவிட்டு, உடனே அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து சுஷ்ரதாவை மிரட்டி தாலி கட்டினார்.
பிறகு அவர் சுஸ்ரதாவை உத்திர பிரசேத்தில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். இதுபற்றி பேலி கிராமத்தை சேர்ந்த சமூக நல அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி சில்பிசிங் என்பவர் பொலிசில் புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து பொலிசார் அதிரடி வாகன சோதனை நடத்தி சுஸ்ரதாவை மீட்டனர். கர்ப்பிணிப் பெண்ணை ஏமாற்றி விற்பனை செய்த பெண்ணையும், விலைக்கு வாங்கிய அசோக்சிங் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Average Rating