இராணுவ பெண் வீராங்கனை மர்ம மரணம்!!
இந்தியாவின் முதல் பெண் ராணுவ ஜவான் தூக்கிட்டு மர்மான முறையில் இறந்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாந்தி டிக்கா (36). தனது கணவர் இறந்ததும், 2005-ம் ஆண்டு கருணை அடிப்படையில் ரயில்வேயில் பணியில் சேர்ந்தார்.
சால்சா ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் ரயில்வே பொறியாளர் பிராந்தியத்தின் 969-வது ராணுப்பிரிவில் சேர்ந்து கடும் பயிற்சி எடுத்து இந்தியாவின் முதல் பெண் வீரர் என்ற பெருமை பெற்றார்.
இந்நிலையில் கடந்த 11-ம் திகதி இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். அவரது கண்கள் துணியால் கட்டப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டதற்கான ரத்த காயங்களுடன் ரயில் தண்டவாளம் அருகே மயக்க நிலையில் கிடந்தார்.
மறுநாள் மீட்கப்பட்டு அலிபுர்டுவார் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்
Average Rating