மாணவிக்கு பாலியல் தொல்லை லாரி டிரைவர் சிறையில் அடைப்பு!!
Read Time:56 Second
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னையை அடுத்த செங்குன்றம் பழைய அலமாதி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (24).
ஆட்டோ டிரைவர். இவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
இதுகுறித்த புகாரின்படி, சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தலைமறைவாக இருந்து வந்த சுரேஷை இன்று கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Average Rating