மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!!
மேற்கு வங்க மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் 3ம் வகுப்பு மாணவனின் தலையைப் பிடித்து ஆசிரியை சுவற்றில் முட்ட வைத்துள்ளார். இதில் அந்த மாணவன் பலியானான். மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது நிர்தேஷ்காளி சிஷு சிக்ஷா கேந்திரா பள்ளி.
அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாபி ஜோவார்தர்(9). பாபி வீட்டுப் பாடத்தை முடிக்காமல் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சம்பா மோன்டல் சிறுவனின் தலையைப் பிடித்து சுவற்றில் வேகமாக மோதியுள்ளார். இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.
உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள நேஷனல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தான். இதைடுத்து ஆசிரியை சம்பாவை போலீசார் இன்று கைது செய்தனர். சம்பா அந்த பள்ளியில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating