விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை!!
நீர்கொழும்பு நகரின் வீதியோரங்களில் நின்று விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி விபச்சாரத்திற்காக ஆண்களை அழைக்கும் பெண்களுக்கு இந்த எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
“விபச்சாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம்”, “விபச்சாரிகளுக்கு இனிமேல் தண்டனை அசிட் ஆகும்” போன்ற வாசகங்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இனந்தெரியாத நபர்களால் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த எச்சரிக்கை சுவரொட்டிகள் வைத்தியசாலை அருகில் கடந்த வாரமும் ஒட்டப்பட்டடிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில், நேற்று இரவு முதல் மீண்டும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Average Rating