குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 47 Second

arest-400x250உத்திரபிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர், பொலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றனர்.

இவர்கள் பொலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக முதலில் புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று பல்பீரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து லக்னோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பல்பீர் இறந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஊசி வாயிலாக ஆசிட், பெட்ரோ‌ல் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

குற்றத்தை ஏற்கச்சொல்லி பொலிசார் பல்பீரை வற்புறுத்தியதாகவும், அதனாலேயே சூடான தட்டில் அமர வைப்பது மற்றும் இது போன்ற கொடுமைகளை புரிந்துள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் பொலிசார் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!!
Next post மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!!