நித்யா மேனனின் வருத்தம்…!!
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நித்யாமேனன். மலையாள பெண்ணாக இருந்தாலும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்பத்தில் தெலுங்கு, கன்னட படங்களில்தான் அதிகமாக நடித்தார்.
அதன்பிறகு தமிழ், மலையாளம் என்று வளர்ந்தார். இப்படி நான்கு மொழி நடிகையாகி விட்டபோதிலும் எந்த மொழியிலும் அவரால் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில்தான் தமிழில் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் நித்யாமேனன்.
இதில் ஆட்டோகிராப் படத்தில் கோபிகா நடித்தது போன்ற கவிதைத்தனமான கேரக்டராம் நித்யாவுக்கு. அதனால், இந்த படத்திற்கு பிறகு கோபிகா இடத்தை பிடித்து விடுவேன் என்று கூறுகிறார் நித்யாமேனன்.
இப்படி நம்பிக்கையாக பேசும் நித்யா மனதளவில் ஒரு வருத்தத்திலும் இருக்கிறார். என்ன என்று கேட்டால், தெலுங்கில் நான் நாயகியாக நடித்த படம் அல மொதலைந்தி.
இப்படத்தை கடல் கெளதமை வைத்து தமிழில் ரீமேக் செய்கிறார்கள். அதனால் தமிழிலும் நடிக்க முயற்சி எடுத்தேன். ஆனால், அந்த வாய்ப்பு வேறொரு நடிகைக்கு சென்று விட்டது என்றும் சொல்கிறார்.
Average Rating