சுந்தரபாண்டியன்-100வது நாள் விழாவுக்கு லட்சுமிமேனன், விஜய் சேதுபதிக்கு விருது!!
கொலிவுட்டில் சசிகுமார்- லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து வெளியான படம் சுந்தரபாண்டியன். மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் தந்த இப்படம் சென்னை உட்பட சில இடங்களில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.
படத்தின் நூறாவது நாள் விழா ஷீல்டுகளை தனி விழாவாக வைத்து தராமல், புதுமையாக அவரவர் வீடுகளுக்கே போய் வழங்க முடிவு செய்தார் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான சசிகுமார். படத்தின் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரனுக்கு, தனது குரு பாலாவின் அலுவலகத்தில் வைத்து ஷீல்ட் வழங்கினார் சசிகுமார். அப்போது தன் சிஷ்யன் சசிகுமாரின் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினார் பாலா.
படத்தின் நாயகி லட்சுமி மேனனுக்கும் அவர் இருப்பிடத்துக்கே போய் ஷீல்ட் வழங்கி நன்றி தெரிவித்தார் சசிகுமார். அவருடன் இயக்குனர் பிரபாகரனும் சென்றிருந்தார். இந்தப் படத்தின் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி மட்டுமல்லாது ஒவ்வொரு கலைஞரின் வீட்டுக்கும் சசிகுமார் சென்றார்.
அப்போது, அக்கம் பக்கத்திலிருந்த மக்கள், ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டனர். அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து நன்றி தெரிவித்தார் சசிகுமார்.
தனது சுப்பிரமணியபுரம் தொடங்கி சுந்தரபாண்டியன் வரை தொடர்ந்து ஆதரவளித்த ஊடகத்துறைக்கு நன்றி தெரிவித்து தனி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் சசிகுமார்.
Average Rating