காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!!

Read Time:2 Minute, 7 Second

207628_1678080588277_1125362184_31475961_6587557_n_largeகாதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுவீதியில் அடித்து, உதைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் பெண்ணொருவர். இந்தியாவின் குஜராத் மாநிலம் மீரட் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆண் தன்னை பல வருடங்களாக காதலித்து மோசம் செய்துவிட்டதாகவும், பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் அப்பெண் புகார் கூறியுள்ளார்.

ஏமாற்றம் அடைந்ததால் கோபம் அடைந்த அந்த பெண் காதலனின் சட்டையை பிடித்து இழுத்து நடுவீதியில் அடித்து உதைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை சாலையில் சென்றவர்கள் பார்த்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பொலிஸில் காதலனை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண் அவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவன் திருந்தி வாழ நினைத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால், கைது செய்யப்பட்டுள்ள ஆசிஷ் என்ற வாலிபர் செய்தியாளர்ளிடம் கூறியதாவது, இது திட்டமிட்ட சதி. அந்தப் பெண் யார் என்றே எனக்கு தெரியாது. இது போன்ற குற்றச்சாட்டை ஏற்கனவே என் மீது சுமத்தினார்கள்.

ஆனால் நான் குற்றமற்றவன் என நிரூபித்து வெளியே வந்தேன். இப்போது மறுபடியும் அந்தப் பெண் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். திருமணம் செய்வதை விட சிறைக்கு செல்வதே மேல் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருமகளை கற்பழித்த கிழட்டு மாமனார்! கணவனின் டேக் இட் ஈசி பாலிசி!!
Next post செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை!!