செங்குன்றம் : பரோலில் வந்த ஆயுள் கைதி வெட்டிக் கொலை!!

Read Time:3 Minute, 35 Second


images
செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடி பாதம் பகுதியை சேர்ந்தவர் முத்துபிரகாஷ் (வயது 35). இவரது மனைவி ஜானகி, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2003-ம் ஆண்டு நாவலூர் ஊராட்சிமன்ற தலைவர் பொன்மணி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக முத்துபிரகாஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேருக்கும் 2006-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த முத்துபிரகாஷ் அடிக்கடி வெளியில் உள்ளவர்களிடம் திருட்டுத்தனமாக செல்போன் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் 6 மாதங்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தனது உறவினர் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக முத்துபிரகாஷ் கடந்த 14-ந் திகதி பரோலில் வெளியே வந்தார். அப்போது காந்திநகர் நாகாத்தம்மன் நகரில் உள்ள முத்துபிரகாசுக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ராமு, அவரது மனைவி நாகலட்சுமி இருவரும் சேர்ந்து வேறு ஒருவருக்கு விற்றது தெரியவந்தது.

இதுபற்றி முத்துபிரகாஷ் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் முத்துபிரகாசின் பரோல் இன்றுடன் முடிவடைந்தது. எனவே முத்துபிரகாஷ் இன்று காலை தனது அக்காள் முத்துலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் நாகாத்தம்மன் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

முத்துலட்சுமி மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றார். முத்துபிரகாஷ் மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு வெளியே நிறுத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ராமு, அவரது மனைவி நாகலட்சுமி, மகன் சரத், மகள் சரண்யா, மருமகன் கதிர், சரத்தின் நண்பர் விஜி ஆகியோர் அரிவாளுடன் வந்தனர். அவர்கள் முத்துபிரகாசை சமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தலை, முகம், தொடை பகுதியில் பலத்த வெட்டுபட்ட முத்துபிரகாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுபற்றி சோழவரம் பொலிசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு பொன்னேரி பொலிஸ் டி.எஸ்.பி. உஷாராணி, இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் பொலிசார் விரைந்து சென்றனர்.

பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகள் 6 பேரையும் பொலிசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்..!!
Next post ஸ்ரேயாவின் பேரு மட்டும்தான் பவித்ரா!!