தனியார் கம்பெனிக்குள் காவலாளி மர்ம சாவு!!
Read Time:1 Minute, 4 Second
அரக்கோணம் நாகவல்லி அம்மன் நகர் 2&வது தெருவை சேர்ந்தவர் தனஞ்செயன் (48). திருநின்றவூர் சிடிஎச் சாலையில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த தனஞ்செயன், நேற்று காலை கம்பெனி வளாகத்துக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள், காவலாளி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே கம்பெனி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Average Rating