கள்ளக் காதலை கணவன் கண்டித்ததால் மனைவி ஆசிட் குடித்து தற்கொலை!!
Read Time:1 Minute, 22 Second
கொடுங்கையூர் சுசிலா நகரைச் சேர்ந்தவர் ஜம்பு (வயது 24). கொருக்குப்பேட்டையில் உள்ள இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாய்ரா பானு (22).
இருவரும் 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தர்மினி (3), ஹரிஸ் (1 1/2வயது) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். ஜம்பு வீட்டுக்கு அவரது சித்தி மகன் ஸ்ரீதர் அடிக்கடி வருவார். சாய்ராபானுவுடன் சிரித்து சிரித்து பேசு வாராம்.
இதில் அவர்களுக்கிடையே கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனால் மனைவியை ஜம்பு கண்டித்தார். இதனால் வேதனை அடைந்த சாய்ராபானு நேற்று வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating