பஸ்ஸில் பாலியல் சேஷ்டை, கோப்ரல் விளக்கமறியலில்!!
Read Time:1 Minute, 21 Second
பஸ்ஸில் பெண் பயணியுடன் முறைகேடாக நடந்து கொண்ட இராணுவ கோப்ரல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்.
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பெண் பயணித்துக் கொண்டு இருந்தார். தேநீர் இடைவேளைக்காக பஸ் மொரவெவவில் தரித்து நின்றது.
அப்போதுதான் பஸ்ஸில் கோப்ரல் ஏறி பெண்ணுக்கு அருகில் அமர்ந்து கொண்டார். பஸ் மீண்டும் புறப்பட்டபோது இவர் பெண்ணுக்கு அங்க சேஷ்டைகள் செய்ய தொடங்கினார்.
பெண் சத்தம் போட்டு நீதி கோரினார். இப்பெண்ணை கோப்ரல் அங்க சேஷ்டை செய்யாதபடி நடத்துனர் பார்த்துக் கொள்ள பொலிஸ் நிலையத்துக்கு பஸ்ஸை கொண்டு போனார் சாரதி.
பொலிஸாரிடம் கோப்ரல் கையளிக்கப்பட்டார். திருகோணமலை பதில் நீதிவான் எஸ். திருச்செந்தில்நாதன் இவரை விளக்கமறியலில் போட உத்தரவிட்டார்.
Average Rating