சம்மன் கொடுக்கச் சென்றபோது கத்தியால் குத்திய குற்றவாளி: போலீஸ் ஏட்டு பலி!!

Read Time:1 Minute, 37 Second

imagesftசென்னையில் போலீஸ் ஏட்டு ஒருவரை குற்றவாளி கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் தியாகராஜன்.

இவர் நேற்று ஐஸ் ஹவுஸ், செல்லம்மா தோட்டம் பகுதியைச் சேர்ந்த குற்றவாளி விமல்ராஜிடம், கோர்ட்டில் ஆஜராவதற்கான சம்மனை கொடுக்கச் சென்றார். அப்போது, தியாகராஜன் கழுத்தில் விமல்ராஜ் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டான்.

இதில் படு காயமடைந்த காவலர் தியாகராஜன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால், ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தியாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளி விமல்ராஜை காவல்துறையினர் கைது செய்தனர். விமல்ராஜ் பெயரில், ஐஸ் ஹவுஸ் மற்றும் கோட்டூர்புரம் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமிமேனன்!!
Next post யுவதியை மிரட்டி பல தடவை வல்லுறவுக்குட்படுத்திய பிரபல தயாரிப்பாளர் கைது!!