கேபிள் டிவி ஆபரேடர் கொலை… மனைவி உள்ளிட்ட மூவர் கைது!!

Read Time:1 Minute, 44 Second

teசென்னை அம்பத்தூரில் கேபிள் டிவி ஆபரேடர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, மாமனார், மைத்துனர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்பத்தூர் பானு நகரில் வசித்து வந்தவர் ஸ்ரீதர்.

இவருக்கு மனோன்மணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் திருமுல்லை வாயில் பகுதியில் கேபிள் டிவி ஆபரேடராக உள்ளார். கடந்த 13-ஆம் தேதி காலை அம்பத்தூரில் தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்த போலீசார் அவரது மனைவி மனோன்மணி, அவரது தந்தை நாகசுந்தரம் மற்றும் ராஜா ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.

ஸ்ரீதருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததுடன், தினமும் மனைவி மனோன்மணியத்தை கொடுமை செய்ததாகவும், இதனால், ஆத்திரமடைந்த மனோன்மணி தனது தந்தை, தம்பியுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக சுதாகர் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேங்காக் ஆட்டோ ஷோவில் கிறங்கடித்த அழகிகள்!!(PHOTOS)
Next post நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்!!