இரு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய்: குழந்தைகள் பலி!!
மட்டக்களப்பு மீராவோடையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்த தாய் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதுடன் குழந்தைகள் இருவரும் பலியாகியுள்ளனர்.
குறித்த தாய் இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளார்.
சம்பவத்தில் அவருடைய இரு குழந்தைகளான பூஜா ( வயது 7) மற்றும் மூன்றரை வயதான மேனுஜா ஆகிய இருவரும் பலியாகியுள்ளனர்.
அவர்களுடைய சடலங்கள் மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசிகளினால் காப்பாற்றப்பட்ட தாய் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே குறித்த தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
Average Rating