அழகுக்காக நாடு கடத்தப்பட்ட இளைஞருக்கு மெர்சிடிஸ் காரை பரிசளித்த பெண்!!
மிக அழகாக இருப்பதால் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டுபாய் இளைஞரான ஒமர் பொர்கான் அல் காலாவுக்கு பிறந்த நாள் பரிசாக ‘மெர்சிடிஸ் ஜி 55’ ரக காரொன்றை பெண்ணொருவர் அனுப்பிவைத்துள்ளார். ஆனால் அப்பெண் யார் என்பது தெரியவில்லையாம். 23 வயதான ஒமர் பொர்கான் அல் காலா எனும் இந்த இளைஞர் சவூதி அரேபியாவில் கடந்த மாதம் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது அவரும் மேலும் இரு ஆண்களும் சவூதி அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் மிக அழகாக இருப்பதால், மேற்படி கலாசார நிகழ்வுக்கு வரும் பெண்கள் மயங்கிவிடக்கூடும் என இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இச்செய்தி ஊடகங்களில் வெளியானபின் உலகம் முழுவதும் பிரபலமான நபராகpவிட்டார் அல் காலா. அதன்பின் கனடாவின் வான்கூவர் நகருக்கு இடம்பெயர்ந்துவிட்ட அல் காலா குறுந்திரைப்படமொன்றில் நடித்து வருகிறார். பெரும் எண்ணிக்கையான பெண்கள் அவரை சந்திப்பதற்கும் திருமணம் செய்வதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் தனக்கு வருகின்றன என்கிறார் அல் காலா. இந்நிலையில், அண்மையில் அவர் தனது பிறந்ததினத்தை கொண்டாடியபோது பலர் அவருக்கு பரிசுகளை அனுப்பிவைத்தனராம். அன்றைய தினம் அவரின் வீட்டுக்கு வந்த ஒருவர் மெர்சிடிஸ் ஜி 55 ரக ஆடம்பர காரொன்றை அல் காலாவுக்கு கொடுத்து ஆவணங்களில் கையெழுத்திடுமாறு கோரினாராம். இந்த காரை பெண்ணொருவர் அனுப்பிவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘எனது பிறந்த தினத்தன்று மெர்சிடிஸ் ஜி55 ரக காரொன்று எனது வீட்டுக்கு அனுப்பப்பட்டது.
எனக்கு அறிமுகமில்லாத பெண்ணொருவர் அதை அனுப்பியுள்ளார். ஆவணங்களில் கையெழுத்திட்டு அதை பெற்றுக்கொள்ளுமாறு மாத்திரம் எனக்கு கூறப்பட்டது’ என அல் காலா தெரிவித்துள்ளார். தான் இப்போது பிரபலமான ஒருவராக மாறிய நிலையிலும் தான் யதார்த்தமானவராகவே உள்ளதாகவும் தனது தலைக்கனம் அதிகரிக்கவில்லை எனவும் அல் காலா கூறுகிறார். ‘நான் தினமும் இறைவனை வணங்குகிறேன்’ என்கிறார் அவர்
Average Rating