திருமணம் செய்ய கொலை மிரட்டல் : மாணவி விஷம் குடித்து தற்கொலை!!
பண்ருட்டி அருகே திருமணம் செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததால் நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அருகே ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சுமித்ரா (18). கடலூரில் உள்ள நர்சிங் பயிற்சி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்தார்.
இவரை அதே ஊரை சேர்ந்த கார்பென்டர் தேவநாதன் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி மிரட்டியுள்ளார். கடந்த 24ம் தேதி சுமித்ராவின் வீட்டுக்கு சென்ற தேவநாதன், அவரை திருமணத்துக்கு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த சுமித்ரா பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ராமலிங்கம் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சுமித்ராவின் துக்க நிகழ்ச்சிக்கு தேவநாதன், அவரது தந்தை வீரமணி, தாய் மகாதேவி, சகோதரர் புருஷோத்தமன் ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது சுமித்ராவின் உறவினர் இளங்கோ ஆத்திரம் அடைந்து, தேவநாதனின் தந்தை வீரமணியிடம், Ôஉன் மகனால்தான் சுமித்ரா தற்கொலை செய்து கொண்டாள்Õ என்று கேட்டு தகராறு செய்தார்.
அப்போது இளங்கோ தாக்கப்பட்டார். காயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக பண்ருட்டி போலீசில் இளங்கோ புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணி (55), அவரது மற்றொரு மகன் புருஷோத்தமன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பியோடிய தேவநாதன், அவரது தாய் மகாதேவி ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Average Rating