பேயைக் கண்டுபிடிக்க கேமரா வைத்தார் காதலர்… மகனுடன் செக்ஸ் வைத்து சிக்கினார் காதலி!!
தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதிய ஒரு நபர் அங்கு ரகசியக் கேமராவை வைத்துக் கண்காணித்து வந்தார். ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.
மாறாக, அந்த நபரின் காதலி, தனது 16 வயது மகனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனார்.
இதையடுத்து போலீஸில் அவர் புகார் கொடுக்க, கோர்ட்டில் நிறுத்தப்பட்ட அந்த 28 வயது காதலிக்கு 12 மாத கால சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஹோபர்ட்டைச் சேர்ந்தவர் இந்தப் பெண்.
இவரும், அவரது காதலரும் கடந்த 11 வருடமாக கதாலித்து வருகின்றனர். காதலரின் வீட்டில் அவரும், அவரது மகனும் வசித்து வருகின்றனர்.
மகனுக்கு 16 வயதாகிறது. அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக கருதினார் காதலர். இதையடுத்து பேய்களை புகைப்படமாக பிடிப்பதற்காக அதிக நவீன ரகசியக் காமராவை வீட்டில் பொருத்தியிருந்தார்.
இந்த நிலையில் அவரது காதலி ஒரு நாள் வீட்டுக்கு வந்துள்ளார். காதலரின் மகனை அணுகிய அவர் அவனிடம் டிரைவிங் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார். பின்னர் அருகே அமர்ந்து கட்டிப் பிடித்தார். முத்தம் கொடுத்தார். பிறகு மெதுவாக செக்ஸில் புகுந்தார்.
இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டனர். இது அப்படியே காதலர் வைத்த ரகசியக் கேமராவில் பதிவானது. வீட்டுக்கு வந்த காதலர் பேய் ஏதாவது கேமராவில் சிக்கியிருக்கிறதா என்பதை ஆராயஅதைப் போட்டுப் பார்த்தார்.
ஆனால் அதில் இருந்த காட்சி அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது காதலி, தனது மகனுடன் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கடும் கோபம் கொண்டார். உடனடியாக போலீஸுக்குப் போன் செய்தார். புகார் பதிவு செய்தார். போலீஸார் காதலியைக் கைது செய்தனர். மைனர் பையனை மயக்கி செக்ஸ் வைத்துக் கொண்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது செக்ஸ் வைத்து்க கொள்வற்கு உகந்த வயது 17 என்பது தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறினார். விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவரை செக்ஸ் மறுமலர்ச்சி மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத கால சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கோர்ட் அறிவித்தது.
Average Rating