தொழிலதிபரை கரம்பிடித்தார் நடிகை நீபா!!
Read Time:1 Minute, 22 Second
நடன அமைப்பாளர்கள் வாமன்-மாலினியின் மகள் நீபா. நடிகையான இவர் பள்ளிக்கூடம், தோட்டா, காவலன் உள்ளிட்ட சில படங்களிலும், ஏராளாமான டி.வி., தொடர்களிலும் நடித்துள்ளார்.
நீபாவுக்கும், வேலூரை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் சிவகுமார் என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி இன்று(மே 29ம் தேதி), சென்னையில் உள்ள ஸ்ரீலட்சுமி பிரசன்ன மகாலில் நீபாவுக்கும், சிவக்குமாருக்கும் திருமணம் நடந்தது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இவர்களது திருமண வரவேற்பு இன்று மாலையில் அதே திருமண மண்டபத்தில் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு சென்னையில் பரத நாட்டியப் பள்ளி தொடங்கி நடத்த திட்டமிட்டுள்ளேன். இப்போதைக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை என்று நீபா கூறியுள்ளார்.
Average Rating