“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே : அனுஷ்கா!!
தமன்னா, இலியானாவைப் போல், தானும், பாலிவுட்டுக்கு பாய வேண்டும் என, கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார், அனுஷ்கா. தெலுங்கு படங்களில் நடித்தால் தான், பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், தெலுங்கில், முன்னணிநடிகர்களின் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில், கவனம் செலுத்தி வருகிறார்.
“நான் ஈ படத்தை இயக்கிய, தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி, தன் கனவு படமாக, ஒரு படத்தை இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர், பிரபாஸ் தான், படத்தின் ஹீரோ. தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும், இந்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
தெலுங்கு, தமிழில், அனுஷ்கா தான், ஹீரோயின் என, முடிவாகி விட்டது. இதன், இந்தி பதிப்பிலும், தானே, ஹீரோயினாக நடிக்க வேண்டும் என, தீவிர முயற்சி செய்து வந்தார், அனுஷ்கா.
ஆனால், இந்தி பதிப்பில், அனுஷ்கா நடிப்பதை விட, சோனாக்ஷி சின்கா நடித்தால் தான், நன்றாக இருக்கும் என, ராஜமவுலி நினைக்கிறாராம். இதனால், “பாலிவுட் வாய்ப்பு, கை நழுவி போய் விடுமோ என, புலம்புகிறாராம், அனுஷ்கா.
Average Rating