ஆந்திர சிறுமி பலாத்காரம் ; வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது அம்பலம்!!

Read Time:2 Minute, 32 Second

wசினிமா ஆசை காட்டி, ஆந்திர சிறுமியை, பலாத்காரம் செய்த வழக்கில், வெளிநாட்டு தொடர்புகள், இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆந்திரா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை, சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த ஆஷா, கடத்தி வந்து, இருவரிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள், சிறுமியை, திருச்சி அழைத்து வந்துள்ளனர். வழியில், காரிலேயே பலாத்காரம் செய்துள்ளனர்.

திருச்சி, கருமண்டபம் நியூ செல்வா நகரில் ஒரு வீட்டில், பூட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி, அங்கிருந்து தப்பி, மகளிர் போலீசில் தஞ்சமடைந்தார். தெலுங்கு மட்டும் பேசத் தெரிந்த அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், சினிமா ஆசை காட்டி, பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருச்சி மாநகர போலீஸ் அதிகாரி, ஒருவர் கூறியதாவது: ஆந்திர சிறுமியை, கொல்கத்தா வழியாக, பங்ளாதேஷூக்கு கடத்த கும்பல் திட்டமிட்டுள்ளது.

கும்பலுடன், வெளிநாட்டு தொடர்புகளும், முக்கிய வி.ஐ.பி.,க்களும் தொடர்பு வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. வெளிநாட்டுக்கு, பெண்களை கடத்தும் கும்பல் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், வழக்கு, சி.பி.சி.ஐ.டி., க்கு மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

சிறுமி பலாத்கார விவகாரத்தில், சிக்கியுள்ள வங்கதேச வாலிபரிடமிருந்து, அந்த நாட்டு பாஸ்போர்ட்டை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் பிடியில் இருக்கும் ஆஷா, பெண்களை ஆசைவார்த்தை கூறி, கடத்தல் கும்பலிடம் ஒப்படைப்பவராக செயல்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரளமாக தமிழ் பேசும் நந்திதா!!
Next post இலங்கையின் முன்னணி ஹோட்டலில் பிகினியில் நடமாடும் பெண்கள்!!(PHOTOS)