ஆசிட் வீச்சால் ஒருமாத காலம் உயிருக்குப் போராடிய நர்ஸ் பலி!!
மும்பையில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் நர்ஸ் வேலையில் சேர்வதற்காக டெல்லியை சேர்ந்த பிரீத்தி ரதி (25) என்ற இளம்பெண் மீது சமூக விரோதிகள் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றனர்.
முகம், கழுத்து மற்றும் சுவாச உறுப்புகள் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் ஆசிட் வீச்சால் கருகிப்போன நிலையில் கடும் ரத்தப்போக்கு நோயால் அவதிப்பட்ட பிரீத்தி ரதி, மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவரது வலதுபக்க நுரையீரல் செயலிழந்ததால் நவீன சிகிச்சை வசதி கொண்ட வேறொரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் ஒருமாத காலமாக அளிக்கப்பட்ட வந்த தீவிர சிகிச்சை பலனின்றி இன்று மாலை 4 மணியளவில் பிரீத்தி ரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை மும்பை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating