அனுராதபுரத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் 58 பேர் பலி40 பேர் காயம்
Read Time:1 Minute, 19 Second
இலங்கையில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 58 பேருந்து பயணிகள் பலியாயினர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். அனுராதபுரத்தில் இருந்து கெபிட்டிகொல்லவே என்ற இடத்துக்குச் சென்று கொண்டிருந்த பஸ் கண்ணி வெடியில் சிக்கி சிதறியது. இதில் 58 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். இன்று காலை 7.50 மணியளவில் இச் சம்பவம் நடந்தது. காயமடைந்தவர்கள் அனுராதாபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகவும் பலத்த காயமடைந்தவர்கள் கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களர்கள் ஆவர். இந்தத் தாக்குதல் இலங்கையில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு புலிகளே காரணம் என இலங்கை அரசின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.