3 வயது சிறுமி பலாத்காரம் உ.பி. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை!!
மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் உ.பி. வாலிபருக்கு மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.
அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ராமன் சர்மா (37). உ.பி.யை சேர்ந்த இவர் கார்பென்டர் தொழில் செய்து வருகிறார். அதே மாநிலத்தை சேர்ந்த விஷால் என்பவரின் 3 வயது மகள் சரஸ்வதி. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது).
2011 டிசம்பர் 4ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் மிட்டாய் வாங்க 2 ரூபாய் தருவதாகக் கூறி தூக்கிச் சென்றுள்ளார் ராமன் சர்மா. தனது அறையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அழுகுரல் கேட்டு சிறுமியின் தாய் அங்கு வந்துள்ளார். சிறுமியை மீட்டு அழைத்துக்கொண்டு அமைந்தகரை போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீசார் ராமன் சர்மாவைக் கைது செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மீனா சதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சியங்கள் மற்றும் மருத்துவச் சான்றுகள் குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளன. எனவே, ராமன் சர்மாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ஸீ 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
Average Rating