விவாகரத்து செய்த கணவரை சந்தித்த தங்கையை கோடாரியால் வெட்டிக் கொன்ற சகோதரன்!!
Read Time:1 Minute, 12 Second
பஞ்சாப் மாநிலம், லோத்ரா அருகேயுள்ள கலோ மாலிக்வாலா பகுதியை சேர்ந்த பெண், இம்தியாஸ் மய். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு நபரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த திருமணத்தை எதிர்த்த அவரது சகோதரன், ஊர் பஞ்சாயத்தை கூட்டி இருவருக்கும் இடையில் விவாகரத்து செய்து வைத்தார்
விவாகரத்துக்கு பின்னரும் இரண்டாவது கணவரை இம்தியாஸ் மய் தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது சகோதரன் சவுக்கத் அலி, இம்தியாஸ் மய்-யை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, உடலையும் தீ வைத்து எரித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
தலைமறைவாக இருக்கும் சவுக்கத் அலியை பிடிக்க பொலிஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating