மேற்படிப்பை தொடர அனுமதி மறுத்தமையால் மாணவி தீக்குளித்து தற்கொலை..!!
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே ஆர்.பி.பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவி 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தொடர்ந்து படிக்க விரும்பினார்.
அதற்கு குடும்பத்தினர் அனுமதிக்காததால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த தேவராஜுடன் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
தேர்வில் வெற்றி பெற்றதால் அவர் தொடர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்தார். அதற்கு தந்தை மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
மாணவிக்கு, 18 வயது கூட ஆகவில்லை. அதிருப்தியடைந்த மாணவி நேற்று முன்தினம் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
பொலிஸாருக்கு தெரிவிக்காமல் குடும்பத்தினர் உடலை எரித்து விட்டனர். இச்சம்பவம் குறித்து ஆர்.புதுக்கோட்டை வி.ஏ.ஓ. தவமணி எரியோடு பொலிஸில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating