நீர்கொழும்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜையை காணவில்லை!!
Read Time:1 Minute, 10 Second
நீர்கொழும்பு, எத்துகால கடற்பரப்பில் குளிக்கச் சென்ற ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமற்போயுள்ளார்.
31 வயதான ஆப்கானிஸ்தான் பிரஜை சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து எத்துகால பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.இதேவேளை எபலியகோட, திகலவத்த பிரதேசத்தில் உள்ள நீர் நிலை ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.உயிரிழந்த நபர் படலங்கட திகலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 57 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொட, ருஸ்ஸகல பிரதேசத்தில் குளு ஓயாவிற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஒருவர் என தெரியவந்துள்ளது.
Average Rating