இளம் தாயை கடத்தி பாலியல் வல்லுறவு…!!
Read Time:1 Minute, 0 Second
வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் தாய் ஒருவரை லொறியொன்றில் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று கொஸ்லாந்தை நாவுல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து குறித்த பெண் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Average Rating