குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காது போதை மயக்கத்தில் வீதியில் பெண்!!
போதை மயக்கத்தில் வீதியில் தாய் விழுந்து கிடந்த நிலையில், தாய்ப்பாலுக்காக தவித்து குழந்தை அழுதது பார்ப்பவர்கள் மனதை, பதைபதைக்க வைத்ததுள்ளது. கோவை லங்கா கார்னர் பகுதியில் நேற்று மாலை 3.00 மணியளவில் பெண் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அவர் அருகில், ஒரு வயதுடைய குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து திகைத்தனர்.
குழந்தை அழுவதை கண்ட சிலர், மனமிறங்கி அருகில் சென்று பார்த்தபோது, மதுவாடை அடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த பெண்ணை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர், அளவு கடந்த போதையில் தத்தளித்து கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகியும் தாய்க்கு மயக்கம் தெளியவில்லை. குழந்தை தாயிடம் பால் குடிக்க முயற்சித்தது. ஆனால், குழந்தையால் முடியாமல் போகவே, தொடர்ந்து கதறி அழுதது. அருகிலிருந்த சிலர், குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்தனர். பாலை குடித்த குழந்தை, சிறிது நேரம் அமைதியாக இருந்தது.
நீண்ட நேரமாகியும், தாய் போதையில் இருந்து மீளவில்லை. கூட்டத்தை கண்டு, குழந்தை மிரண்டு அழத்துவங்கியது. ஒரு மணி நேரத்துக்கு பின், தாய் எழுந்து உட்கார்ந்தார். அவரால் எழுந்து நடக்கவோ, குழந்தையை அரவணைக்கவோ, முடியவில்லை. குழந்தையின் நிலையை பார்த்த அந்த வழியே சென்றவர்கள், ‘எத்தனையோ பேர், குழந்தை இல்லாமல் கோவில், குளம் என சென்று வருகின்றனர்… பெத்த புள்ளைய காப்பாத்த தெரியலையே´´ என, பரிதாபப்பட்டனர்.
Average Rating