சட்டத்தரணியின் மனைவிக்கு அந்தரங்கத்தை காண்பித்த மூவர்!!
சட்டத்தரணியொருவரை பியர் ரின்னின் பின்பக்கத் தால் தாக்கிவிட்டு அவரது மனைவிக்கு தங்களது அந்தரங்கத்தை காண்பித்து பாலியல் இச்சைக்குள்ளாக்கிய மூன்று நபர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி களுத்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அருண அளுத்கே உத்தரவிட்டுள்ளார்.
களுத்துறை மொறன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சட்டத்தரணியின் வீட்டுக்கு அருகில் மதுவருந்திவிட்டு அநாகரியமாக நடந்து கொண்ட இந்த நபர்களைப் பார்த்து சட்டத்தரணி கூச்சலிட வேண்டாம், பிள்ளைகள் படிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே அந்த நபர்கள் சட்டத்தரணியை பியர் ரின்னால் தாக்கியுள்ளதுடன் அவரது மனைவிக்கு ஆடையைத் தூக்கி அந்தரங்கத்தை காட்டி பாலியல் இம்சைக்குள்ளாக்கியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
Average Rating