பாதுகாப்பு உபகரங்களின்றி 250 அடி உயரத்தில் தொங்கிய இளைஞன்!!
இங்கிலாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகத்துணிச்சலுடன் பாதுகாப்பு உபகரங்களின் உதவி எதுவுமின்றி 250 அடி உயரமான க்ரைனில் ஒற்றைக் கையினால் தொங்கி படம் பிடித்து வெளியிட்டுள்ளார். ஜேம்ஸ் கிங்ஸ்டன் என்ற இளைஞனே மேற்படி அபாயகரமான வேலையை துணிகரமாக செய்துள்ளார். இச்சம்பவம் இங்கிலாந்தின் சௌதம்டன் பிரதேசத்திலுள்ள ஓரிடத்திடலேயே இடம்பெற்றறுள்ளது.
இது குறித்த ஜேம்ஸ் கூறுகையில், எனது ஊரில் பெரிய கட்டிடங்கள் அமைவது மிக அரிது. இதனால் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மிக அழகான புகைப்படங்களை எடுக்கவே இவ்வாறு செய்தேன். சுமார் ஒரு மணி நேரம் உச்சத்தில் இருந்து அதன் சுற்றுச்சூழல் அழகினை ரசித்தேன். நான் உயிரை விடுவதற்காக மேலே செல்வில்லை.
உயிர் வாழ்வதற்காகவே மேலே சென்றேன் எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் போது குறித்த இளைஞன் பாதுகாப்பு உபகரணங்களுக்கு பதில் கெமரா ஒன்றினை எடுத்துச்சென்று உயிரைப் பறிக்கும் உயரத்தில் இருந்து ஒற்றைக் கையில் தொங்கியவாறான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
Average Rating