அஷ்ரஃபுல்லுக்கு தற்காலிகக் தடை! : தவறுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்!!

Read Time:2 Minute, 12 Second

873ashrafulபங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன் னாள் தலைவர் மொஹம்மத் அஷ்­ரஃ­புல்­லுக்கு அந் நாட்டு கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை தற்­கா­லிக தடை­வி­தித்­துள்­ளது. பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் கிரிக்கட் போட்­டி­க­ளின்­போது ஆட்ட நிர்­ணயம் மற் றும் உடன் நிர்­ணயம் ஆகி­ய­வற்றில் ஈடு­பட் டார் என்ற சந்­தே­கத்­தின்­பேரில் அவ­ருக்கு தற்­கா­லிகத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பாக விசா­ர­ணை­களை நடத்­தி­வரும் சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் இயங்கும் ஊழல் மோசடி தடுப்பு மற்றும் பாது­காப்புப் பிரிவின் அறிக்கை கிடைக்கும் வரை அஷ்­ரஃ­புல்­லுக்கு தற்­கா­ லிக தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பங்­க­ளா தேஷ் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை அறி­வித்­துள்­ளது.

பங்­க­ளாதேஷ் பிரீமியர் லீக் போட்­டி­களின்போது நிர்­ண­யங்­களில் ஈடு­பட்­ட­தாக அஷ்­ரஃபுல் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரி­வித்­துள்ளார். ஊழல் மோசடி தடுப்பு மற்றும் பாது­காப்பு பிரி­வி­ன­ரிடம் தான் ஆட்ட நிர்­ண­யத் தில் ஈடு­பட்­ட­தாக அஷ்­ரஃபுல் ஒப்­புக்­கொண்­டுள்­ளதால் விசா­ரணை தொடர்­பாக பூரண அறிக்கை கிடைக்­கும்­வரை அவர் எந்த மட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என அவர் குறிப்பிட்டார். இதேவேளை தான் செய்த தவறுக்கு ரசிகர்களிடத்தில் அஷ்ரபுல் இன்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணிக்கு 500 கிலோ மீட்டர் செல்லும் புல்லட் ரெயில் ஜப்பானில் சோதனை!!
Next post அஜித் படத்தில் கவர்ச்சி காட்ட தடையா?: கொந்தளிக்கும் தமன்னா!!