அஷ்ரஃபுல்லுக்கு தற்காலிகக் தடை! : தவறுக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்!!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன் னாள் தலைவர் மொஹம்மத் அஷ்ரஃபுல்லுக்கு அந் நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தற்காலிக தடைவிதித்துள்ளது. பங்களாதேஷ் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளின்போது ஆட்ட நிர்ணயம் மற் றும் உடன் நிர்ணயம் ஆகியவற்றில் ஈடுபட் டார் என்ற சந்தேகத்தின்பேரில் அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகளை நடத்திவரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் இயங்கும் ஊழல் மோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் அறிக்கை கிடைக்கும் வரை அஷ்ரஃபுல்லுக்கு தற்கா லிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பங்களா தேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளின்போது நிர்ணயங்களில் ஈடுபட்டதாக அஷ்ரஃபுல் ஒப்புக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடம் தான் ஆட்ட நிர்ணயத் தில் ஈடுபட்டதாக அஷ்ரஃபுல் ஒப்புக்கொண்டுள்ளதால் விசாரணை தொடர்பாக பூரண அறிக்கை கிடைக்கும்வரை அவர் எந்த மட்ட கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என அவர் குறிப்பிட்டார். இதேவேளை தான் செய்த தவறுக்கு ரசிகர்களிடத்தில் அஷ்ரபுல் இன்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
Average Rating